நாட்டில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதுவரை பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி சமீபத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் காரணமாக அரசு ஊழியரான விஸ்மயாவின் கணவர் கிரன் குமாரை பணிநீக்கம் செய்ய கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரளா எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்று அவர் கூறியுள்ளார். வரதட்சணை கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
வரதட்சணை கொடுமை- அரசுவேலை பறிப்பு….. கேரளா முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!
