இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ஜோத்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார். தான் ஒரு சில ரூபாய் நாணயங்களை விழுங்கியதாக அவர் கூறியுள்ளார். அதன் பிறகு எண்டோஸ்கோபி மூலம் அவரது வயிற்றில் இருந்து 63 நாணயங்கள் அகற்றப்பட்டன . அந்த நபர் மன உளைச்சலில் இருந்ததால் மனநல சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர், வயிற்று வலி இருப்பதாக 36 வயதான நோயாளி ஒருவர் புகார் தெரிவித்தார் .அதனால் அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில் மனசோர்வின் காரணமாக இரண்டு நாட்களில் 63 ஒரு ரூபாய் நாணயங்களை அவர் விழுங்கியது தெரியவந்தது. மருத்துவத்துறையை சேர்ந்த மருத்துவர்கள் குழு இரண்டு நாட்களாக நாணயங்களை எடுக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. பின்னர் நாணயங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.