மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக ஒரு பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவரும் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் வலி ஏற்படுகிறது என்று எண்ணி அதனை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.
ஒரு நாள் வலி அதிகமாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து பார்த்த போது பெண்ணின் வயிற்றில் துணி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டும் வயிற்று வலியால் துடிதுடித்து உயிரிழந்தார். வயிற்றில் துணி வைத்து தைத்த தான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை அளித்தும் பலனின்றி உள்ளது. இச்சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.