Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்றில் இருந்த 3 கிலோ கட்டி… நடந்து முடிந்த அறுவை சிகிச்சை… மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

பெண்ணின் கர்ப்ப பையில் இருந்த 31/2 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ராஜ வீதியில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திராணி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரின் வயிற்றின் அடிப்பகுதி வீங்கி காணப்பட்ட நிலையில் இதுகுறித்து பரிசோதனை செய்தபோது இந்திராணியின் கர்ப்ப பையில் சதை பிடிப்பு கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து கட்டியை எடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திரநாத் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர் அன்புச்செழியன், மயக்கவியல் மருத்துவர் சாந்தி தேவி மற்றும் உதவியாளர்கள் சுகந்தி, காயத்திரி, கண்ணம்மா, பாண்டியன், பிரவின் பாலாஜி ஆகியோர் 1 மணி நேரம் போராடி இந்திராணி கர்ப்ப பையில் இருந்த 31/2 கிலோ கட்டியை அகற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்துள்ளனர். தற்போது இந்திராணி நலமாக உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய கட்டிகளால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், பெண்களுக்கு வயிற்றுவலி, வயிற்று எடை அதிகரித்தால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |