வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள sao paulo என்ற மாகாணத்தில் ohana karolin(24) என்ற இளம் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயிற்றுக்கு கீழே உடை இல்லாமல் அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு அவரது வயிறு கிழிக்கப்பட்டு அவரது வயிற்றிலிருந்து ஏழு மாத குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக அந்த பெண் கண்டெடுக்கப்பட்ட விஷயம் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை கரோலின் சமீபத்தில் தான் தனது கணவரை பிரிந்து புதிய காதலரை அவர் தேடிக் கொண்டிருந்த நிலையில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. பயங்கரமான ஒரு கூட்டத்துடன் கரோலின் சுற்றிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அவரது தோழி ஒருவர் அதனாலேயே அவரது நண்பர்கள் பலர் அவரை விட்டு தூர விலகி விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் போலீசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.