தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், ரேஷன் அட்டை வைத்திருந்து வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 2023 பொங்கலுக்கே இந்த திட்டம் தொடங்கப்படும் என தெரிகிறது.