Categories
மாநில செய்திகள்

வணிகர்களே….! “இனி நிம்மதியா இருக்கலாம்”….. டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

வணிகர்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையில் காவல் செயலியில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

கடைகளில் வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிப்பது, பொருள்களை சேதப் படுத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிப்பதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் காவல் உதவி ஆப் உருவாக்கப்பட்டது. இந்த செயலியை ஏப்ரல் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார் . ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கும் அனைவரும் இதை எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அந்த வகையில் தற்போது வணிகர்கள் உதவி என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திருச்சியில் கடந்த மாதம் 5ஆம் தேதி வணிகர்கள் சங்க மாநாடு நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், வணிகர்கள் காவல் துறையினரிடம் எளிதில் புகார் அளிக்க வசதியாக, காவல் உதவி செயலியில், வணிகர் உதவி வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வணிகர்கள் காவல்துறையினரின் அவசர உதவியை நாட வணிக உதவி என்ற வசதி காவல் உதவி செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரவுடிகள் வணிகர்களிடம் பிரச்சினை செய்தால், மாமுல் வசூலித்தால், கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். எனவே வணிகர்கள் அனைவரும் இந்த காவல் உதவி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |