வடகொரிய நாட்டை விட்டு ஒருவர் வெளியே வர முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? வடகொரியாவில் கிங் ஜாங் இருக்கும் வரை யாராலும் நாட்டை விட்டு வெளியேற முடியாது. இந்நிலையில் OH CHONG – SONG என்ற ராணுவ வீரர் ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தை திருடிவிட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்லைக்கு பகுதிக்கு வந்த போது திடீரென கார் சேற்றில் மாட்டிக்கொண்டது.
உடனே ராணுவ வீரர் வண்டியிலிருந்து கீழே இறங்கி ஓடியுள்ளார். இதனால் மற்ற ராணுவ வீரர்கள் அவரை பிடிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அந்த ராணுவ வீரருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் ராணுவ வீரர் வட கொரிய நாட்டின் எல்லையை தாண்டிவிட்டார். இதனையடுத்து மற்ற ராணுவ வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.