வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
Categories
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி….1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…!!!!!!!!
