வட கொரியா ஒரேநாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இச்சோதனைகள் அமைந்துள்ளது. இந்த ஏவுகணை சோதனைகளை முன்னிட்டு அதனுடைய அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதனிடையில் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இன்றுஅதிகாலை தென்கொரியா மற்றும் அமெரிக்கா தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 8 நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் திங்கள்கிழமை அதிகாலையில் 4:45 மணிக்கு துவங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென்கொரியா மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனை நடத்தினர்.