Categories
தேசிய செய்திகள்

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்….. தேவேந்திர பட்னாவிஸ்….!!!!

வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருவதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்த்ராவில் உள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மும்பையின் மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதனால் அங்கு தங்கும் இடம் போன்ற வசதிகள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பவன் அது போன்றவர்களுக்கு நிவாரணத்தை வழங்கு.ம் இந்த புதிய கட்டிடம் வெளிமாநிலங்களில் இருந்து வரும் புற்றுநோயாளிகளின் குடும்பத்தினர் குறைந்த செலவில் தங்க வசதியை ஏற்படுத்தி தரும். எனது தந்தையை புற்றுநோய் சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது நோயாளிகளின் குடும்பத்தினர் தங்க இடமில்லாமல் நடைபாதையில் தங்கி இருந்ததை பார்த்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |