நடிகர் ரஜினி அரசியல் வருகை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடே ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த முடிவை ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவரது திரைப்பட வசனத்தில் வருவதைப் போல, ‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக’ முடிவெடுத்துள்ள ரஜினிக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு ஆன்மீக அரசியல் பக்கம் திரும்பும்” என்று அவர் கூறியுள்ளார்.