Categories
உலக செய்திகள்

லெபனான் பிரதமர் கொலை வழக்கு…குற்றவாளி யார்?… சர்வதேச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

லெபனான் பிரதமர் கொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அது அப்போது பிரதமராக இருந்த ரபீக் ஹரிரி உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றம், சலீம் அய்யாசை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதே சமயத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சலீம் அய்யாசை குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதில் ஹிஸ்புல்லா செயல்பாட்டாளர் சலீம் அய்யாசுவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அமெரிக்கா வரவேற்கிறது. மேலும் இந்த தீர்ப்பு ஹிஸ்புல்லாவும் அதன் உறுப்பினர்களும் லெபனானின் பாதுகாவலர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த உதவுகின்றது. ஹிஸ்புல்லா, ஈரானின் மோசமான திட்டங்களை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |