ஹாலிவுடில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஷாங்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் “லால் சிங் சத்தா” என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. டாம் ஷாங்க்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாகசைதன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடிகர் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஏஜென்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாகசைதன்யா, நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். நர்சிங் செத்தா படத்தில் நடித்தற்காகவும் அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னை வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என்று நினைக்கிறேன். ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனம் மற்றும் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை உங்களுக்காக வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி என்று வழங்குகிறோம். எனவே திரையரங்கிற்கு சென்று கண்டு களித்து ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.