Categories
மாநில செய்திகள்

லாரி மோதி விபத்து….. சைக்கிளில் சென்ற யூடியூபர் உயிரிழப்பு….!!!!

சென்னையில் லாரி மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த யூடியூபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நெப்போலியன் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நெப்போலியன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே நெப்போலியன் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில் நெப்போலியன் யூடியூபில் முக்கிய இடங்களுக்கு டிராவல் செய்து அந்த பயணத்தை வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளது தெரியவந்தது. சென்னையில் அதிகாலையில் முக்கிய இடங்களை வீடியோ பதிவு செய்வதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |