Categories
மாநில செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய பாலிடெக்னிக் மாணவர்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை…..!!!!!

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர்.

அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா அமர்ந்திருந்தார். இந்நிலையில் திருவொற்றியூர் ஜோதிநகர் அருகில் சென்றபோது பின்னால் இருந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கிவீசப்பட்ட நிலையில், சாலையில் விழுந்த பால் கிருபாகரன், லாரி சக்கரத்தில் சிக்கி உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதனிடையில் பின்னால் அமர்ந்து ருந்த ஜீவா, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக சாத்தாங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |