Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரிக்குள் இருந்து பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  குடிமை  பொருள் வழங்கல்  குற்ற புலனாய்வு  காவல் துறையினரான சப்- இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையிலான சுரேஷ் எட்டு மற்றும் சரவணன் ஆகியோர் கொண்ட குழு சின்ன குன்றகுடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை  செய்ததில்  லாரியில் 40 மூட்டைகளில்  ரேஷன் அரிசி  கடத்தி வந்தது  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  லாரி ஓட்டுனர் மூர்த்தி  கிளினர்  சரவணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காவல்துறையினர் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |