லண்டனில் 46 வயது நபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மேற்கு லண்டனில் Dariusz Wolosz ( வயது 46 ) என்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலந்து நாட்டை சேர்ந்த Dariusz Wolosz-க்கும் ஆண்கள் சிலருக்கும் லண்டன் Tavistock சாலையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில் Dariusz Wolosz-ன் மார்பு மற்றும் இடுப்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு அறிக்கை வெளியானது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.