முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த முதியவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் முதியவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, எனது பெயர் சிகாமணி. நான் பண்ருட்டி கீழ்மாம்பட்டை பகுதியில் வசித்து வருகிறேன். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். அதனை கொடுக்க மறுத்ததால் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் மன உளைச்சலில் தீக்குளிக்க முன்றதாக முதியவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.