Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூரில் நடந்தது சோகமானது…. பாரபட்சமற்ற விசாரணை நடத்துங்க…. சம்பித் பத்ரா…!!!

பாஜகவின் சம்பித் பத்ரா, வன்முறை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை ராகுல் காந்தி கூறுவதால் பொறுப்பற்ற தன்மை அவரது இரண்டாவது பெயராக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில்  பா.ஜ.க அரசாங்கம் திட்டமிட்டு விவசாயிகளை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது, “லக்கிம்பூர் கேரியில் நடந்தது சோகமானது. விவசாய அமைப்புகளும் அரசாங்கமும் பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒப்புக்கொண்டன. மேலும் இரு தரப்பினரும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று  நாட்டுக்கு தெரிவித்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி வன்முறை குறித்து பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான  கருத்துக்களை வெளியிடுவதற்கு இது சரியான நேரம் அல்ல” என்று கூறியுள்ளார். 

Categories

Tech |