Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரோலரில் சிக்கிய தலை…. பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லுடைக்கும் ஆலை எந்திரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை சிவன் கோவில் தெருவில் லாரி ஓட்டுநரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரக்கு ஏற்றுவதற்காக அப்பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலைக்கு தமிழரசன் சென்றுள்ளார். அப்போது லாரியை நிறுத்திவிட்டு தமிழரசன் ஆலையில் ஓடிக்கொண்டிருந்த எந்திரத்தின் பெல்டில் ரோலர்களுக்கு இடையே இருந்த கல் மற்றும் மண்ணை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தமிழரசனின் கை பெல்ட்டில் சிக்கி கொண்டது. இதனை அடுத்து தமிழரசனின் தலையும் ரோலரில் சிக்கி ஒரு சுற்று சுற்றியதால் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |