Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய அதிவிரைவு படையினர்… கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் உள்ளதா? என்று ஆய்வு…!!!

கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் இருக்கின்றதா? என்று மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மத்திய அதிவிரைவு படையினர் 15 பேர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு, கொடைக்கானலில் பதற்றமான பகுதி இருக்கின்றதா? என்று ஆய்வு செய்தனர்.

மேலும் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு மேற்கொள்வது எப்படி என்றும், மதக்கலவரங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்வது எப்படி என்றும், கொடைக்கானலில் அவசர நேரத்தில் அதிவிரைவு படையினர் விரைந்து வருவது எப்படி என்றும் ஆய்வு செய்துள்ளனர்.கொடைக்கானல் மட்டுமில்லாமல் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வரைபடத்துடன் கூடிய அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப் போகிறோம் என்று அதிவிரைவு படை கமாண்டர் வெங்கடேஷ் கூறினார்.

Categories

Tech |