தேனியில் தீயணைப்பு துறையினுடைய ஓய்வுபெற்ற அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனூரில் ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறையினுடைய கண்காணிப்பாளர் கந்தவேல் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சில வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமாவிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கந்தவேலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.