Categories
மாநில செய்திகள்

“ரொம்ப மோசம்” தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு….. மத்திய அரசு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் , சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழி முறைகளை தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது என்பதால், தீவிர வழிமுறையை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |