நெல்லையில் வயிற்றுவலி காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முத்துச்செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த முத்துச்செல்வம் பூச்சி மருந்து குடித்து, தனது வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.