ரேஷன் அட்டைகள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும், உரிய நபருக்கு பலன்கல் பொய் சேரவேண்டும் என்பதற்கும் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பது முக்கியம் ஆகும். தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக உங்களது ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் எப்படி இணைக்கலாம் என்பது குறித்து நாம் காண்போம்.
ஆன்லைன் வழிமுறை:
# தங்கள் மாநிலத்தின் PDS போர்ட்டலின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
# ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
# ஆதார் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
# பின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளிடவேண்டும்.
# தொடர் மற்றும் சமர்ப்பி பொத்தானை அழுத்தவேண்டும்.
# உங்கள் செல்போன் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
# பின் உங்களது ரேஷன் அட்டைக்கான ஆதார் இணைப்பை கோரும்போது நீங்கள் பெற்ற OTP-ஐ உள்ளிட வேண்டும்.
ஆப்லைன் வழிமுறைகள்
# உள்ளூர் PDS (அ) ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும்.
# உங்கள் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரேஷன் கார்டின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டையின் நகல்களைக் கொண்டு செல்ல வேண்டும்.
# குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் கொண்டு செல்ல வேண்டும்
# உங்கள் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை எனில், வங்கி கடவுச்சீட்டின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.
# இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்களது ஆதார் அட்டையின் நகலுடன், PDS கடைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
# ஆதார் எண்ணைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை எனில், ரேஷன் கடை விற்பனையாளர் கைரேகை அங்கீகாரத்தை கோரலாம்.
# ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், உங்களது பதிவுசெய்யப்பட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
# அதன்பின் 2 ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டவுடன் மற்றொரு SMS அறிவிப்பைப் பெறுவீர்கள்.