தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்காக அரசு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முறை தீபாவளி அன்று சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க இருக்கிறது இதன் கீழ் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வெறும் நூறு ரூபாயில் பல வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வருகின்ற தீபாவளிக்கு மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு 100 ரூபாய் மளிகை பொருட்கள் வழங்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த நூறு பாக்கெட்டில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் மஞ்சள் பருப்பு போன்றவை இருக்கிறது. மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் படி இந்த சலுகையை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அதன்படி சர்க்கரை, உளுத்தம் பருப்பு, சமையல் எண்ணெய், ரவை போன்றவை 478 கோடிக்கு அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தவிர ரேஷன் கார்டு தாரர்களுக்கு 35 கோடியில் மற்ற உணவு பொருட்கள் வாங்கப்படும் மகாராஷ்டிராவில் வசிக்கும் ரேஷன் கார்டுகள் 30 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இந்த சலுகை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பலன்களை வழங்குவதே அரசு முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.