Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!” கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் செயலாளர் அருணா உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.” கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் நியாய விலை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதன்பின்னர் அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் அரசிடமிருந்து வழங்கப்படவில்லை. எனவே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மீண்டும் வரும் வரை நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தி வைக்க வேண்டும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. என அவர் கூறியுள்ளார். அதோடு ற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விதி 110ன் கீழ் ஆணை எண் 3 ன் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |