தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன் பிறகு நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.