Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க… அரசு எடுக்கும் அதிரடி முடிவு…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

ரேஷன் கடைகளில் எடையாளர், பணியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 33,000 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்கள் என மொத்தம் 25,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது ஒரு கடைக்கு ஒரு பணியாளர் கூட இல்லாத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன்விளைவாக ஒரே நபர் 2,3 கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை நீடித்து வந்ததால் பணிச்சுமை ஊழியர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் பணி சுமையை குறைக்கும் விதமாக மாவட்ட வாரியாக மொத்தம் 3,300 விற்பனையாளர்கள், 600 எடையாளர்கள் என என மொத்தம் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட இருக்கின்றனர்.  இப்பணி நியமனங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முன்னதாக மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப100-200 பேரை நியமிக்க மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம்2020-21 அறிவிப்பு வெளியிட்டது.

விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ரேஷன் கடைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் வரையும் அரசியல்வாதிகள் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து நேர்காணல் முடிந்த நிலையில் தேர்வானவர்கள் பட்டியல் கொரோனா  மூன்றாம் அலை காரணமாக தாமதமாகி வந்த ரேஷன் கடை பணிநியமனங்களை  விரைந்து முடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூட்டுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |