தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவசஅரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிரட்டு கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதனிடையே மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் சர்க்கரை வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். பொதுமக்களுக்கு வழங்க தேவையான அரிசி மற்றும் சர்க்கரையை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் நடந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையும் முடிந்துவிட்டது.தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பொருட்களை பண்டிகைக்கு முன்னதாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் இலவச பொருட்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் இலவச பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.