தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் இனி மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கான பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் கூறினார்.