Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய உறுப்பினர் பெயர் சேர்ப்பது எப்படி….? முழு விவரம் இதோ…!!!!!!!

இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்  குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ரேஷன் பொருட்கள்  தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன்  என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடு ஏற்படுவது குறைந்து இருக்கின்றது.

மேலும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும். அதனால் நீங்கள் புதியதாக திருமணமானவராக இருந்தால் உங்களின் மனைவியின் பெயர் இணைக்கப்பட வேண்டும்.  இதற்கு திருமண சான்று, கணவரின் ரேஷன் கார்டு, மருமகளின் பெயர், பழைய ரேஷன் கார்டு அட்டையில் இருந்து நீக்கப்பட்ட சான்றிதழ், தாய்வழி ரேஷன் கார்டு மற்றும் தாய்வழி ஆதார் அட்டை நகல் அதில் கணவனின் பெயர் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

இதனை தொடர்ந்து உங்களுக்கு குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தையின் பெயரும் ரேஷன் கார்டில்  கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும். இதற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்துடன் இதற்கு ஆதார் அட்டையில் ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும். மேலும் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை பல மாநிலங்கள் ஆன்லைன் முறையிலும்  நேரடி முறை முறையிலும்  செய்யப்பட்டு வருகிறது. இதனை நேரடி முறையில் நீங்கள் மேற்கொள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து உணவு  வினியோக மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விரைவில் புதிய புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றது.

1. முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.

2. இதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

1. முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.

2. இதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Categories

Tech |