Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

ரேஷன் கார்டுகள்  பயன்படுத்தாமல் இருந்தால் அதனை ரத்து  செய்ய  அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி. ரேஷன் கார்டில் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ரேஷன் கார்டு  ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நீண்ட கால உணவு தானியங்களை வாங்குவதற்கு உங்களுடைய ரேஷன் கடை பயன்படுத்தாமல் இருந்தால் அது ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதை உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்களின் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விதிமுறையின்படி எந்த மாதத்தில் நீங்கள் ரேஷன் வாங்கினீர்கள், உங்கள் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் போன்ற அனைத்து தகவல்களும் ரேஷன் கார்டில் இருக்கிறது. உங்கள் பெயரில் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கும். ஆனால் சமீபகாலமாக சில மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த ரேஷன் கடைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களாகபொருட்கள்  வாங்காமல் இருந்தால் அவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் உணவு தானியங்கள் தேவை இல்லை, எனவும் ரேஷன் வாங்க அவருக்குத் தகுதி இல்லை எனவும் விதிமுறைப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆறு மாதங்களாக ரேஷன் வாங்காதவர்கள் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்டால் அதனை மீண்டும் செயல்படுத்துவதற்கு மாநில ரேஷன் போர்ட்டலில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |