மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சிதம்பரநாதன்(42) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிதம்பரநாதன் வீட்டிலிருந்த பழைய ரேடியோ ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிதம்பரநாதன் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிதம்பரநாதனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.