Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட்… ஆரஞ்ச் அலர்ட்… மஞ்சள் அலர்ட்… பச்சை அலர்ட்… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் அதிக கனமழையும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய கூடிய பகுதிகளுக்கு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் அதிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ள இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படும். அதன்படி

ரெட் அலர்ட்: அபாயத்தை உணர்த்தும் குறியீடாக பார்க்கப்படுகிறது. 20 சென்டிமீட்டர்க்கும் அதிகமான மழை.

ஆரஞ்ச் அலர்ட்: உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படும் மோசமான வானிலை இருப்பதைக் குறிக்கிறது. 15 சென்டி மீட்டருக்கு அதிக மழை.

மஞ்சள் அலர்ட்: வானிலை மிகவும் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. அனைத்து அடிப்படைத் தேவைகளையும் தயார் நிலையில் வைப்பது நல்லது. 6 முதல் 10 சென்டிமீட்டர் வரை மழை

பச்சை அலர்ட்: மழை வருவதற்கான அறிகுறி, மிதமான மழைக்கு வாய்ப்பு.

Categories

Tech |