Categories
தேசிய செய்திகள்

ரூ. 500 கேட்டா, ரூ.2500 கொட்டிய ஏடிஎம் மையம்…. முந்தியடித்த மக்கள்…. நாக்பூரில் நடந்த சுவாரசியமான சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு 500 ரூபாய்க்கு பதில் 2500 ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. இருந்தாலும் வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய்தான் டெபிட் ஆகி உள்ளது. அதனால் உறுதி செய்ய 500 ரூபாயை எடுத்தபோது மீண்டும் rs.2500 வந்துள்ளது. அதன்பிறகு அவர் அந்த இடத்திலிருந்து சென்ற பின்னர் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதனால் ஏராளமான மக்கள் ஏடிஎம் மையம் முன்பு குவிந்தனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விஷயம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தெரியவர தகவல் தெரிந்ததும் ஏடிஎம் மையத்தை பூட்டி மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏடிஎம் மிஷினில் 100 ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட வேண்டிய டிரெயில் 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் இதற்கு காரணம் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |