கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சில இடங்களில் ஓணம் பண்டிகை தினத்தில் தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் தோட்டத்தில் விளைவித்த காய்கறி பழங்களை ஏலம் விட்டு பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஓணம் பண்டிகை அன்று இடுக்கி மாவட்டத்தில் செம்மன்னாரி என்ற கிராமத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டது.
இதில் ஜார்ஜ் என்பவர் தனது வீட்டில் விளைந்த 5 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை ஏலத்தில் விட்டார். இதன் ஆரம்ப விலை 5000 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஏலத்தில் பூசணிக்காய் விலை உயர்ந்து கொண்டே போக கடைசியில் அந்த பூசணிக்காயை சிபி என்ற நபர் 47 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.