Categories
மாநில செய்திகள்

ரூ.4 கோடியில் மரபணு பகுப்பாய்வு கூடம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு..!!!!

தேனாம்பேட்டையில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை இன்று முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். கொரோனா வைரசின் தீவிரம் மற்றும் அதன் தன்மையை குறித்து முழுமையான மரபணு பகுப்பாய்வு செய்யவும், டெல்டா வகை கொரோனா  வைரஸ் பரவுதலை கண்டறியக் கூடிய வரையிலும் மரபணு ஆய்வு கூடத்தை ரூ.4 கோடி செலவில் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் ஆய்வகம் நிறுவப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.                                                                                                                                                                                                                                                                      அதன்படி மரபணு பகுப்பாய்வு கூட்டம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவந்தன. இந்நிலையில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  அதுமட்டுமல்லாமல் கருணை அடிப்படையில் 91 பேருக்கு மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை  முதல்வர் வழங்கினார்.                                                                                                                                                                                                                                              இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் உடனிருந்தார். இந்தியாவிலேயே இதுதான் மாநில அரசால் அமைக்கப்பட்ட முதல் மரபணு ஆய்வு பகுப்பாய்வு மையம்.

Categories

Tech |