Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரூ.25 லட்சம் மோசடி…. முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் கணவர் கைது….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் திருவேங்கடம் (வயது 52). இவர் கட்டிட காண்டிராக்டராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய மகன் பிரசன்னாவுக்கும் நெல்லையை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய காண்ட்ராக்டரான மணிவண்ணன் என்பவரும் திருவேங்கடமும் நெருங்கிய நண்பர்கள்.

இவரின் மனைவி லீலா. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் மணிவண்ணன் மற்றும் அவரின் மனைவி லீலா, பவித்ராவிடம் சமாதானம் பேசுவதாக கூறியுள்ளனர். இதையடுத்து பவித்ராவிடம் சமாதானம் பேசி விட்டதாகவும், ரூ. 25 லட்சத்தை கொடுத்தால் அவர் விவாகரத்து தந்து விடுவதாக கூறினார் எனவும் திருவேங்கடத்திடம் மணிவண்ணன்-லீலா தம்பதி கூறியுள்ளனர்.

இதனை நம்பிய திருவேங்கடம் ரூ. 25 லட்சம் பணத்தை மணிவண்ணனிடம் கொடுத்திருக்கிறார். அதனை பெற்றுக் கொண்ட மணிவண்ணன் அந்த பணத்தை பவித்ராவிடம் கொடுத்து விட்டேன் என நண்பரிடம் கூறியுள்ளார். இதற்கிடையே பவித்ரா, கணவர் பிரசன்னா மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகே தன்னிடம் வாங்கிய ரூ. 25 லட்சத்தை மருமகளிடம் கொடுக்காமல் மணிவண்ணன் மற்றும் லீலா ஏமாற்றியுள்ளனர் என்பது திருவேங்கடத்துக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த திருவேங்கடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மணிவண்ணன்-லீலா தம்பதி மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான லீலா மற்றும் அவரின் கணவர் மணிவண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் லீலாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |