Categories
தேசிய செய்திகள்

ரூ. 200, ரூ. 300, ரூ. 400 விலையில்…. இந்தியாவிலேயே ஈசியாக கிடைக்கும்….. இந்திய மகளிருக்கு ஓர் GOOD NEWS….!!!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் 200 முதல் 400 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 15 வயது முதல் 44 வயது வரையிலான பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கின்றது. இதற்கு எதிரான தடுப்பூசியை, புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி என்ற சிறப்பை இது பெறுகின்றது. இந்த தடுப்பூசி உருவாக்கி இருப்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திர சிங் இந்த தடுப்பூசி மலிவு விலையில் சாமானிய மக்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறியதாவது “இந்திய பெண்களுக்கு இந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் 200 முதல் 400 ரூபாய்க்குள் கிடைக்கும். இருப்பினும் அரசுடன் விவாதித்து விலை இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் 20 கோடி தடுப்பூசிகளை விற்பனைக்கு கிடைக்கச் செய்வது என்று இந்திய சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Categories

Tech |