கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு ஓணம் பம்பர் லாட்டரி ரூபாய் 12 கோடி பரிசாக கிடைத்துள்ளது.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில் கடந்த ஓணத்தை முன்னிட்டு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. இந்த டிக்கெட்டின் முதல் பரிசு தொகை 12 கோடி ஆகும். இந்நிலையில் கேரள நிதி மந்திரி கே. என் கோபால் கலந்துகொண்டு அதிஷ்டசாலிகளை தேர்வு செய்தார்.
இந்நிலையில் முதல் பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி ஒரு ஆட்டோ டிரைவர் என்பதும், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சேர்ந்த ஜெயபாலன் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 10ஆம் தேதி இந்த லாட்டரி சீட்டை எர்ணாகுளம் அருகே உள்ள ஒரு கடையில் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக ரூபாய் 7.39 கோடி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.