உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோ அடுத்த ஹுசைன் கஞ்ச் என்கின்ற பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை டியூஷன் சென்றுள்ளார்.அப்போது மாலை 6 மணிக்கே டியூஷன் முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோ காக அவர் காத்திருந்தார்.அப்போது வந்த ஆட்டோவை தன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் என அந்த இளம் பெண் கூறி ஏறிய நிலையில் திடீரென அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் ஆட்டோ சென்றுள்ளது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்ட நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதிக்குள் ஆட்டோ சென்றுள்ளது. ஆட்டோ அங்கு சென்றதும் அந்த பெண்ணை இரண்டு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.அதன் பிறகு அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு சாலையிலேயே அந்த பெண்ணை வீசி சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.