Categories
மாநில செய்திகள்

‘ரூட் தல’ குட்டிக்கு ஜாமீன்….. “ஆனா இவங்களுக்கு 6 நாட்கள் உதவனும்”….. ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னையில் உள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 நாட்கள் உதவியாக இருக்க ‘ரூட் தல’ குட்டிக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னை பச்சைப்பன் கல்லூரி மாணவர் குட்டி  ‘ரூட் தல’ எனக்கூறி புறநகர் ரயிலில் கத்தி மற்றும் கற்களை காட்டி பயணிகளை மிரட்டியதையடுத்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று  உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  சென்னை மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 சனிக்கிழமைகளில் உதவ ரூட்டு தல மாணவருக்கு  நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது..

மேலும் அந்த மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த உயர் நீதிமன்றம், மாணவருக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்தவும்,  படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது என தெரிவித்தது.

Categories

Tech |