இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டரும், உலக கோப்பை வென்ற கேப்டனுமான எம்எஸ் தோனி மிகவும் அமைதியான நபர். பல ஆண்டுகளாக டீம் இந்தியாவை வழிநடத்தும் போது, தோனி களத்தில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் தோனி எந்த விவாதத்திலும் ஈடுபடுவதில்லை, மேலும் அவர் தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டார்..
இதற்கு உதாரணமாக தற்போதைய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தின் இன்ஸ்டாகிராம் நேரடி வீடியோவின் போது தோனி தனது முகத்தை கைகளால் மறைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரில் பங்கேற்க டேரினிடாட் வந்துள்ள இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் ரோகித், ரிஷப் மற்றும் சூரியகுமார் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லைவில் தோனி அவரது மனைவி சாக்ஷி இருவரும் வந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.