ராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருவிழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏத்தகுடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இந்த விழாவை மன்னார்க்குடி பிரசன்னா தீட்சிதர் கலந்துகொண்டு கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.