ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர் .
துரைசிங்கம் என்பவருக்கு உரிமையான படகில் நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட ஏழு பேர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாரத விதமாக படகு எந்திரகோளாறு ஏற்பட்டு திசை மாறி செல்ல, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களையும் எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி படகுடன் சிறைபிடித்தனர்.
பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லபட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட உள்ளனர்.முன்பு ஒருமுறை இதே படகு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு நல்லிணக்க அடிப்படியில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.