Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டது…. பக்தர்கள் இன்று முதல் இதற்கு அனுமதி….!!

ராமேஸ்வரம் கோவிலில் 6 மாதத்திற்கு பின்னர்  தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் புனித நீராட அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழுகின்ற 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே தீர்த்த கிணற்றை விரைவாக திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அனுமதி வழங்கியது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீர்த்த கிணறுகளில் நீராடலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |