கோவைக்கு சுமார் 5 மணியளவில் செல்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்..
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப் பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்தது.. இதையடுத்து ராணுவ மீட்பு படை வீரர்கள் உடனே அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்..
விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி பயணித்துள்ளார்கள்.. எனவே அவர்களின் நிலை? என்னவென்று இதுவரை தகவல் தெரியவில்லை.. விமான விபத்தில் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது..
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார்.. விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
இந்நிலையில் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் நேரில் விவரம் அறிய செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. மீட்பு பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய 5 மணியளவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிறார்…