தலைநகர் டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை வழங்கி இருக்கின்றனர். சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கயிறு கட்டப்படுகின்றது.
டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணி பார்க் கொழும்பு நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் சுப்பிரமணியன் பேசும் போது மிகுந்த அன்புடனும் நன்றியுடன் நம் நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களுக்காக 1.5 லட்சம் ராக்கிகளை கொண்டு வந்திருக்கின்றோம். அவற்றில் 75,000 ராக்கிகளில் திருக்குறள் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும் 75 ஆயிரம் ராக்கிகள் கையால் செய்யப்பட்டவை ஆகும் என கூறியுள்ளார். இது பற்றி பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி என்ற முறையில் இந்த ராக்கிகளை நான் நேரடியாக முப்படைகளின் ராணுவ தளபதிகளுக்கும் வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன். இதன் மூலமாக மாணவர்கள் கொண்டுவந்துள்ள ராக்கிகள் ராணுவ வீரர்களை முழுமையாக சென்றடையும் என கூறியுள்ளார்.